Saturday, December 31, 2022

அசோகரின் இரண்டாவது கல்வெட்டு கூறும் தமிழக அரசர்கள்

 அசோகர் கிர்நார் (குஜராத்) கல்வெட்டு பொமு.250 இதில் உள்ள சோடா,பாடா, கேதளபுதோ ஸதியபுதோ என்பவை முறையே சோழர், பாண்டியர், சேரர் மற்றும் அதியமான் ஆக இருக்கலாம் என அறிஞர் கருத்து.

 
தமிழ் பிராமி எழுத்துக்கள் வடமொழி பிராமி எழுத்துக்களை தழுவியே உருவாகியது

அசோகரின் இரண்டாவது கல்வெட்டு கூறும் தமிழக அரசர்கள்

கார வேலன் கலிங்க அரசன் ஹத்திகும்பா கல்வெட்டு கூறும் தாமிரக் கூட்டணி

 ஒடிசாவின் கலிங்க அரசன் காரவேலன் வடமொழி கல்வெட்டு கூறும் தாமிர கூட்டணி.

ஹாத்திகும்பா கல்வெட்டு அல்லது அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, "யானைக்குகை" கல்வெட்டு) என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.


தாம்ர கூட்டணி என்பதை தமிழ் மன்னர் கூட்டணி என்ற படிப்பு உண்டு. வரலாறு ரீதியாக தாமிர என்பதே சரி


கார வேலன் கலங்க அரசன் ஹத்திகும்பா கல்வெட்டு கூறும் தாமிரக் கூட்டணி







பல்லவர்கள் காஞ்சி கடிகை பல்கலைக்கழகம் கூறும் 5ம் நூற்றாண்டு கன்னட தாளகுண்டா கல்வெட்டு

 பல்லவர்கள் காஞ்சி கடிகை பல்கலைக்கழகம்  கூறும் 5ம் நூற்றாண்டு கன்னட தாளகுண்டா கல்வெட்டு

கர்நாடகத்தில் ஷிமோகா அருகில் உள்ள தாளகுண்டா சிவன் கோவில் தூணில் உள்ள கன்னட கல்வெட்டு பொஆ.5ம் நூற்றாண்டு பிற்பகுதியை சேர்ந்தது.

https://www.karnataka.com/shimoga/talagunda-pranaveshwara-temple/ 

praneshwara-temple-talagunda-wiki.jpg
Pranavesvara Temple, Talagunda

தலகுண்டா கல்வெட்டில் காஞ்சிக் கடிகை

அந்தண குடியிற் பிறந்த மயூரவர்மன் (கி.பி. 345 – 370) என்பவன் கடம்ப குலத்தைப் பாணவாசியில் நிறுவி ஆண்டுவந்தான். காகுஸ்தவர்மன் இவனுடைய கொள்ளுப் பேரனாவான். கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம்,  தலகுண்டா கிராமத்தில் உள்ள பிரணவேஸ்வரா கோவில்  வளாகத்தில் சம்ஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ள இந்த மன்னனின் கல்வெட்டிற்கு  தலகுண்டா தூண் கல்வெட்டு என்று பெயர். இந்தக் கல்வெட்டே கடிகையைப் பற்றி முதலில் பதிவு செய்த கல்வெட்டு என்று கருதப்படுகிறது. (பார்வை: எபிகிராபியா இண்டிகா தொகுதி VIII எண். 5 பக். 24). இக்கல்வெட்டு கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று பி.எல்.ரைஸ் கால அளவீடு செய்துள்ளார். இக்கல்வெட்டு காஞ்சியில் செயல்பட்ட கடிகையைப் பற்றிப் பதிவு செய்துள்ளது.

“யஹ் ப்ரயாய பல்லவவெந்த்ர புரீம் குருனா சமம் வீர சர்மனா, அத்ஹீஜிக் ஹாம்சுஹ ப்ரவகனம் நிக்ஹிலம் விவேலாய தர்க்குகஹ”

மயூரசர்மன், தன்னுடைய ஆசிரியர் வீரசர்மனுடன், பல்லவேந்திரபுரி (காஞ்சிபுரம்) நகருக்குச் சென்று சமய அறிவை எல்லாம் கற்றறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டதால், அங்கு இருந்த கல்லூரியான கடிகாவில் மாணவனாக இடம் பெற்று விட்டான் என்று பதிவு செய்துள்ளது.

talagunda_pillar_inscription_28455-460_ad29_at_talagunda

தலகுண்டா தூண் கல்வெட்டு

மயூரசர்மனும் அவனுடைய ஆசிரியர் வீரசர்மனும்  வேத சாஸ்திரங்களில் புலமை உடையவர்கள். என்றாலும் காஞ்சிக் கடிகையில் இடம் பெற்றிருந்த சதுர்வேத பண்டிதர்களிடம் கற்ற பிறகே ஒருவரின் வேத சாஸ்திரக் கல்வி முழுமை பெற்றதாகக் கருதப்பட்டதாகத் தெரிகிறது.  மயூரசர்மன் யாசகனாக (தர்க்குகஹ), அஃதாவது அறிவினை யாசிப்பதற்காகக், காஞ்சிக் கடிகைக்குச் சென்றான். தன்னுடன் தன்னுடைய ஆசிரியனான வீரசர்மனுடன் சென்றான். வேதம் முழுவதையும் பிரவசனம் (Expound) செய்து  கற்றுக்கொள்ளும் நோக்கில் இவர்கள் காஞ்சிக் கடிகைக்குச் சென்றுள்ளனர். பிரவசனம் என்றால் மிகுந்த கவனத்துடன் ஆழ்ந்து ஆராய்ந்து கற்றல் என்று பொருள் கொள்ளலாம். இந்த நிகழ்வு கி.பி. 4 ஆம் நூற்றண்டில் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பல்லவமல்லனாகிய இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடி செப்பேடு காஞ்சி கடிகையைப் பற்றியும் இக்கடிகையில் அந்தணர்களுக்கு நான்கு வேதங்கள் கற்பிக்கப்பட்ட செய்தியையும் பதிவு செய்துள்ளது. எனவே காஞ்சிக் கடிகையில் வேத ஆராய்ச்சிக் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது தெளிவு.

காஞ்சிக் கடிகைக்குப் பல்லவர்கள் புரவலர்களாகத் திகழ்ந்தார்கள், பேணிக் காத்தார்கள்.   கடிகையார்களும் பல்லவ மன்னனுக்காக அஸ்வமேத யாகம் நடத்தினர். ஒரு சமயம் மயூரசர்மனுக்கும் பல்லவர்களுடைய குதிரைச் சேவகனுக்கும் வாக்குவாதம் முற்றிச் சண்டை மூண்டது. இந்தச் சண்டை, சேவகன் அந்தணரை ஏளனமாகப் பேசியதால் மூண்ட சண்டை ஆகும். அந்தணர்கள் சத்திரியர்களால் உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்று கருதிய மயூரசர்மன் கோபமுற்று தன் ஒளி பொருந்திய வாளை ஏந்தினான். பல்லவரின் காவலர்களை வெற்றிகொண்டு காஞ்சியை விட்டகன்று ஸ்ரீபர்வதம் வரை பரவியிருந்த அடர்காட்டில் புகுந்தான்.

தாளகுண்டாவிற்கு வடகிழக்கே 7 கிமீ தொலைவில் உள்ள மாலவல்லியில் கிடைத்த சாதவாஹனர் கால பிராகிருத கல்வெட்டு, கி.பி 1-2 ஆம் நூற்றாண்டிலிருந்து அந்த இடம் சாதவாகனர்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததை நிரூபிக்கிறது. இங்கு காணப்படும் புனித ஆதிகால கடவுள் பாவா, சாதகர்ணிகளால் வணங்கப்பட்டதாக ஒரு கல்வெட்டில் கூறப்படுகிறது.

IMG_20220727_122836_520.jpg
தாளகுண்டா என்பது ஒரு பழமையான அக்ரஹார நகரமாகும், இது கடம்ப கல்வெட்டுகளில் ஸ்தானா-குந்துரா என்று அழைக்கப்படுகிறது, இது கர்நாடகாவின் முதல் பழங்குடி இராச்சியமான பனவாசியின் கடம்பர்களின் அசல் இல்லமாகும். தலகுண்டாவைச் சுற்றியுள்ள ஆங்காங்கே ஆய்வுகள் செங்கல் கட்டமைப்புகளின் வடிவத்தில் ஆரம்பகால வரலாற்றுச் சின்னங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. 
1280px-INSCIBED_PILLAR_N-KA-B_186_TPR_01455%E2%80%93470_CE_Talagunda_Pillar_Sans
கடம்ப அரசர் காகுஸ்தவர்மரின் தாளகுண்டா தூண் கல்வெட்டு:
praneshwara-temple-talagunda-wiki.jpg
கடம்ப அரசர் காகுஸ்தவர்மரின் தாளகுண்டா தூண் கல்வெட்டு (பொ.யு.455-470) கர்நாடக மாநிலத்தின் ஶிமொக்கா மாவட்டத்தில் உள்ளது.இக்கல்வெட்டு ப்ராணலிங்கேஶ்வர சிவாலயத்தின் முன்பு நிறுவப்பட்டது.
"நமஶ்ஶிவாய" என்று தொடங்கும் இந்தக் கல்வெட்டின் சிறப்பு என்னவென்றால் இது மஹரிஷி பாணினி வகுத்த இலக்கணப்படி அமைந்துள்ள சிறந்ததொரு ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டாகும்.இதில் பல்வேறு சந்தஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.மேலும் ப்ராணலிங்கேஶ்வர ஸ்வாமியை ஸாதகர்ணி முதலான அரசர்கள் வழிபட்டனர் என்று கூறுவதால் அக்கோவிலின் தொன்மையும் தெரியவருகிறது.
அக்கல்வெட்டின் முதல் ஸ்லோகம்,
"ஸித்தம்||
நமஶ்ஶிவாய||
ஜயதி விஶ்வதேவஸங்காத நிசிதைகமூர்த்திஸ்ஸநாதன:|
ஸ்தாணுரிந்துரஶ்மி விச்சுரித த்யுதிமஜ்ஜடாபார மண்டன:||
ஸித்தம்.நமஶ்ஶிவாய.
அனைத்து தேவர்களாலும் ஆன பெருவடிவான ஒரே தேஹத்தை உடையவரும்,பிறைச்சந்திரனின் ஒளியினால் ப்ரகாசிப்பவரும்,ஜடாபாரத்தைத் தரித்திருப்பவரும்,ஸநாதனருமான அந்த ஸ்தாணுவுக்கு வெற்றி.
 
இந்த கல்வெட்டு கடினமான சாம்பல் நிற கிரானைட் தூணில் பொறிக்கப்பட்டு 5 ஆம் நூற்றாண்டின் சிவன் கோவிலின் முன் நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தூண் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டபோது கோயில் பெரும்பாலும் அழிக்கப்பட்டது மற்றும் இடிபாடுகள் மட்டுமே எஞ்சியிருந்தன. தூண் 1.635 மீட்டர் (5.36 அடி) உயரத்தில் 0.4 மீட்டர் (1.3 அடி) சதுர மேல் கொண்டது.[2] இது எண்கோணத் தண்டு, மேலே செல்லும்போது சிறிது சிறிதாக குறுகி சுருங்கும். எண்கோண முகத்தின் அகலம் 0.178 மீட்டர் (0.58 அடி) ஆகும். கல்வெட்டு அனைத்து முகங்களிலும் உள்ளது, ஆனால் 8 முகங்களில் 7 இல், இது தூணின் அடிப்பகுதியில் தொடங்கும் இரண்டு செங்குத்து கோடுகளைக் கொண்டுள்ளது. எட்டாவது முகத்தில், ஒரே ஒரு குறுகிய கோடு மட்டுமே உள்ளது.இந்தியாவில் உள்ள பல ஆரம்பகால கல்வெட்டுகளைப் போலவே இந்த கல்வெட்டு சித்தத்துடன் தொடங்குகிறது, மேலும் இது "நமோ சிவாய" என்று அழைக்கிறது.
1.jpeg
மொழி சிறந்த செவ்வியல் சமஸ்கிருதம் (பண்டைய மொழியியலாளர் பாணினியின் விதிகளைப் பின்பற்றுகிறது). ஸ்கிரிப்ட் கன்னடம் மற்றும் எழுத்துரு மலர் பெட்டி வகை.
275559830_361041745885071_42106812604954
கல்வெட்டில் சமஸ்கிருதத்தின் சந்தா விதிகளை மதிக்கும் 34 கவிதை வசனங்கள் உள்ளன. இருப்பினும், இது புஷ்பிதாக்ரா, இந்திரவஜ்ரா, வசந்ததிலக, பிரச்சிதா மற்றும் பிற மீட்டர்களின் கலவையைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு வசனமும் நான்கு பதங்களைக் கொண்டது. கல்வெட்டின் முதல் 24 செய்யுள்கள் மாத்ரசமகா மீட்டரின் ஆரம்பகால பயன்பாடாகும். தென்னிந்தியாவில் இந்தக் கல்வெட்டின் ஆசிரியர்(கள்) செவ்வியல் சமஸ்கிருதம் மற்றும் வேத இலக்கியங்களில் உரைநடை பற்றிய நெருக்கமான நிபுணத்துவம் பெற்றிருந்ததாக இந்த அம்சங்கள் தெரிவிக்கின்றன.

https://www.karnataka.com/shimoga/talagunda-pranaveshwara-temple/ 

சங்க இலக்கியத்தில் நந்தர் -மௌரியர் பற்றிய கதைகள் பிற்காலத்தவை- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக நூல்

எட்டுத் தொகையில் நந்தர், மௌரியர் பற்றிய கதைகள் பிற்காலத்தவை- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக நூல்

சங்க இலக்கியங்களில் வடநாட்டில் ஆண்ட  நந்த அரச குலத்தை பற்றியும் மௌரியர்களை பற்றியும் உள்ள குறிப்புகள் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நூல் மிகத் தெளிவாக உரைக்கின்றது

சங்க கால சேரமன்னர் சமண முனிவருக்கு பாறைக் குகை வெட்டிக் கொடுத்த பொஆ. 2ம் நூற்றாண்டு புகலூர் கல்வெட்டு 

சங்க கால சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகள்

புகலூர் கல்வெட்டு & காசுகள் அடிப்படையில் சேரன் செங்ட்டுவன் காலம்




தமிழ் பிராமி கல்வெட்டுகள் இன்று வரை கிடைத்துள்ள அனைத்தும் இவையே


கால்டுவெல் மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழக பேராசிரியர்கள்படி தமிழ் மொழி மற்றும் பேசிய மக்கள் கைபர் போலன் கணவாய் வழியே வந்தவர்கள்

தொல்லியல் அடிப்படையில் சங்க காலம்

தமிழின் மிகப் பழமையான பத்துப்பாட்டு எட்டுத்தொகை எனும் சங்க இலக்கியத் தொகுப்பின் காலம் குறிப்பதற்கு தொல்லியல் அடிப்படையில் தெளிவாக காலம் குறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் சேர காசுகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது அவை மறுமறையில் செய்து அதில் ஒரு கருத்து ஒற்றுமை வரத் தோன்றியுள்ளது அவற்றை காண்போம். 

புகலூர் கல்வெட்டு

கரூர் அருகே புகலூர் எனப்படும் பயன்மையின் ஊரின் அருகில் உள்ள ஆறு நாட்டு மலை என்ற மலையில் கிடைத்த சமண முனிவர்களுக்கு பாறை குகை அமைத்துக் கொடுத்த பொ.ஆ.2ம் நூற்றாண்டு கல்வெட்டு

புகலூர் கல்வெட்டில் உள்ள பெயர்கள் மூன்று சங்க அரசின் சேர அரசர்கள் பெயர் என்பது என இப்பொழுது கருத்து ஒற்றுமை வந்துள்ளது 

கோவை செம்மொழி மாநாட்டில் 26.6.2010 அன்று திரு.கிருஷ்ணமூர்த்தி படித்த கட்டுரையில் சேரர் காசுகள் ரோமன் அகஸ்டஸ் சீசர்(ஆட்சி பொமு27-பொஆ14) காசுகளை பின்பற்றி உருவானவை, ஒரு காசு ரோமன் அகஸ்டஸ் சீசர் காசின் மேல் மாக்கோதை அச்சு வைக்கப்பட்டதையும் கூறி உள்ளார். அகஸ்டஸ் சீசர் படம் தாங்கிய காசுகள் 4ம் நூற்றாண்டு இறுதி வரை வெளியுட்டுள்ளனர்.

இந்த மூன்று காசுகளுமே ரோமன் அகஸ்டஸ் சீசர் காசை பின்பற்றி; ஒரு பக்கம் ஆட்சியின் சின்னம் அதாவது வில்லும் மறு பக்கம் அரசன் தலை அமைந்துள்ளது எனப் பழங்காசுகள் ஆய்வு பேரறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். எனவே இவை பொ.ஆ.2-4ம் நூற்றாண்டு என்பது மிகச்சரியாக பொருந்தும்

சங்க காலத்தில் வாழ்ந்த சேர அரசர்கள் 

இக்காசுகளில் உள்ள சேர சங்க காலத்தில் வாழ்ந்த சேர அரசர்கள் பட்டியலை நாம் இரு புத்தகங்களில் காண்கிறோம்


சேரன் செங்குட்டுவன்
பதிற்றுப் பத்து எனும் எட்டுத்தொகை நூல் வெவ்வேறு சேர அரசர்கள் மேல் 10 பாடல் எனும் தொகுப்பில் 5ம் பத்து சேரன் செங்குட்டுவன் ஆகும், அதன் பதிகம் கதையை நீட்டி பிற்காலத்தில் எழுந்ததே சிலப்பதிகாரம் ஆகும்













 

 இந்த காலத்தை ஒட்டிய காசுகள் கிடைத்துள்ளன இதற்கு அடுத்த இரண்டு நூற்றாண்டை சேர்ந்த இரண்டு காசுகளும் கிடைக்கின்றன அவற்றை நாம் காண்போம்

பஞ்சாங்கம் திதி - காலெண்டர் அமைப்பு விளக்கம்

  திதிகள் பற்றிய புரிதல்...

திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் தூரம் என்று பொருள்.அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அளவிடுவது திதியாகும் நண்பர்களே.அமாவாசை நாள் அன்று சூரியனும் சந்திரனும் 0 டிகிரியில் இருப்பார்கள்.அதற்கு அடுத்த நாள் சந்திரன் சூரியனின் பார்வையிலிருந்து 12 டிகிரி விலகிச் செல்லும்.இப்படி விலகி 12 டிகிரி நிற்க்கும் தூரம்தான் பிரதமை.அடுத்து பிரதமையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் துதியை.அடுத்து துதியையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் திருதியை.அடுத்து திருதியையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் சதுர்த்தி.அடுத்து சதுர்த்தியில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் பஞ்சமி.இப்படியாக 12 டிகிரி இடைவெளியில் அடுத்து சஷ்டி,சப்தமி,அஷ்டமி,நவமி,தசமி,ஏகாதசி,துவாதசி,திரயோதசி,சதுர்தசி என சந்திரன் சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று 15 ம் நாள் 180 டிகிரியில் ராசிச்சக்கரத்தில் சூரியனிலிருந்து ஏழாவது ராசியில் நிற்பது பௌர்ணமி ஆகும்.
இப்படி அமாவாசைக்கு அடுத்து வரும் திதிகளுக்கு வளர்பிறை திதிகள் என்று பெயர்.அடுத்து இதே சுழற்சி முறையில் பௌர்ணமியில் இருந்து அதே 12 டிகிரி இடைவெளியில் ஒவ்வொரு திதியாக சூரியனை நோக்கி நெருங்கி சென்று 15 ம் நாள் சூரியனோடு 0 டிகிரியில் நிற்பது அமாவாசை ஆகும்.இப்படி பௌர்ணமிக்கு அடுத்து வரும் திதிகளுக்கு தேய்பிறை திதிகள் என்று பெயர். இப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நகரும் ஒவ்வொரு 12 டிகிரி நகர்வுப்புள்ளிக்கு வைத்த பெயர்களே திதிகள் நண்பர்களே.இதில் அமாவாசையிலிருந்து சந்திரன் 180 டிகிரி விலகிச்செல்லும் போது இடைப்பட்ட காலத்தில் வரும் திதிகள் வளர்பிறை திதிகள் என்றும்,பௌர்ணமி திதியிலிருந்து சந்திரன் சூரியனை நோக்கி வரும் போது இடைப்பட்ட காலத்தில் வரும் திதிகள் தேய்பிறை திதிகள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.அமாவாசை முதல் பௌர்ணமி வரை 15 திதிகள் × 12 டிகிரி = 180 டிகிரி.பௌர்ணமி முதல் மீண்டும் அமாவாசை வரை 15 திதிகள் × 12 டிகிரி = 180 டிகிரி.30 × 12 = 360 டிகிரி.பதிவில் இணைத்துள்ள படத்தை பாருங்கள்.புரியும் நண்பர்களே.
https://www.facebook.com/100000680932161/posts/6129201033779200/?flite=scwspnssThithikaL.jpg
இந்த திதிகளில் குறிப்பிட்ட கிழமைகளில்,குறிப்பிட்ட திதி வருவது சுப திதிகள்/ அசுப திதிகள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
நற்பலன் தரும் சுபதிதிகள்:
ஞாயிற்றுக்கிழமை வரும் அஷ்டமி திதியும்,திங்கட்கிழமை வரும் நவமி திதியும்,செவ்வாய்க்கிழமை வரும் சஷ்டி திதியும்,புதன்கிழமை வரும் திருதியை திதியும்,வியாழக்கிழமை வரும் ஏகாதசி திதியும்,வெள்ளிக்கிழமை வரும் திரயோதசி திதியும்,சனிக்கிழமை வரும் சதுர்த்தசி திதியும் சுபகாரியங்களுக்கு ஏற்ற திதிகள் நண்பர்களே.
சுபகாரியங்களுக்கு ஆகாத திதிகள்:
ஞாயிற்றுக்கிழமை வரும் சதுர்த்தசி திதியும்,திங்கட்கிழமை வரும் சஷ்டி திதியும்,செவ்வாய்க்கிழமை வரும் சப்தமி திதியும்,புதன்கிழமை வரும் துதியை திதியும்,வியாழக்கிழமை வரும் அஷ்டமி திதியும்,வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியும்,சனிக்கிழமை வரும் சப்தமி திதியும் சுபகாரியங்களுக்கு ஆகாத திதிகள்.இந்தக் காலங்களில் சுப காரியங்கள் தவிர்ப்பது நலம் நண்பர்களே.மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை மட்டும் வைத்தே சுப காரியங்களுக்கு நாட்களை தேர்வு செய்யக்கூடாது.நட்சத்திர தாராபலனோடு சேர்த்துப்பார்த்து சுப காரியங்களுக்கு நாட்களை தேர்வு செய்வது மிகச்சிறப்பு நண்பர்களே.
திதிகளில் செய்ய வேண்டிய காரியங்கள் மற்றும் பலன்கள்:
பிரதமை திதி
வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும்,திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும்.அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம்.உலோகம் கருங்கல் மரம் இவைகளில் சித்திரை வேலைகள் செய்யலாம்.கத்தி போன்ற ஆயுதங்கள் செய்யலாம்.மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அதிக உழைப்பு இருக்கும்.விட்டுக்கொடுத்து போகும் தன்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.அவசர புத்தி இருக்கும் அவசரமாக ஒரு காரியத்தை செய்வார்கள்.குலதெய்வ அனுக்கிரகம் குறைவாக இருக்கும்.வீடு வண்டி வாகனங்கள் அமையும்.அதில் பிரச்சனை இருக்கும். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி நண்பர்களே.
துதியை திதி
அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை,ஆபரணங்கள் தயாரிக்கலாம்.விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம்.யாத்திரை செல்லலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் லாபம் உண்டு.வீடு வண்டி வாகன யோகம் உண்டு.தாய் பாசம் உடையவராக இருப்பார்.சுகவாழ்வு அமையும்.தந்தை சம்பந்தப்பட்ட உறவுகளில் பிரச்சனைகள் இருக்கும்.இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன் நண்பர்களே.
திருதியை திதி
குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள்.மேடைப் பேச்சாளராக இருப்பார்.குழந்தைகளால் பிரச்சனை இருக்கும்.அரசு வழி ஆதாயம் உண்டு.சுய தொழிலில் இழப்பை சந்திப்பார்கள்.தந்திரசாலிகளாக இருப்பார்கள்.இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி) நண்பர்களே.
சதுர்த்தி திதி
முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது. இந்த திதியில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை இருக்கும்.அதிகமாக அலைச்சல் பட வேண்டியது இருக்கும்.விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும்.சிறுவயதில் விபத்தை சந்திக்கலாம்.சதுரங்க விளையாட்டில் ஆர்வம் இருக்கும்.மணவாழ்வில் பிரச்சனை இருக்கும்.எளிமையாக இருக்க விரும்புவார்.சாப்பாட்டு ராமனாக இருப்பார்.எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது நண்பர்களே.
பஞ்சமி திதி
எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும்.இந்தத் திதியில் பிறந்தவர்கள் படிப்பில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.குலதெய்வ அனுக்கிரகம் இருக்கும்.எளிதில் காதல் வயப்படுவார்கள்.நிறைய ஏமாற்றங்களை சந்திப்பார்கள்.கடன் பிரச்சனை இருக்கும்.சொத்துக்கள் இறுதிக்காலத்தில் அமையும்.குழந்தைகள் மேல் பிரியமாக இருப்பார்.இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.பஞ்சமி திதியில் செய்யும் காரியங்கள் வெகு காலம் நிலைத்திருக்கும் நண்பர்களே.
சஷ்டி திதி
சிற்ப,வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.பசுமாடு வீடு வாகனம் விலைக்கு வாங்கலாம்.மருந்து உட்கொள்ளலாம் தயாரிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.சாணக்கியத்தனமும்,தந்திரமும் இருக்கும்.முன்கோபம் உடையவராக இருப்பார்.சுகவாழ்வை விரும்புவார்.இதற்காக எந்த எல்லைக்கும் போவார்.வீடு வண்டி வாகன யோகம் உண்டு.கடன் பிரச்சனை இருக்கும்.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்.நொறுக்குத் தீனியை விரும்பி உண்பார்.இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும் நண்பர்களே.
சப்தமி திதி
பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம்.வீடு கட்டலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் தாயாருடன் கருத்து வேறுபாடு உடையவர்களாக இருப்பார்.பேச்சுத் திறமை உள்ளவர்களாக இருப்பார்.கூட்டுத் தொழில் சிறக்கும்.மனைவி வழி ஆதாயம் உண்டு.வலிமையான உடல் அமைப்பு உள்ளவர்.வீடு வண்டி வாகனங்கள் அமைவதில் தாமதம் உண்டாகும்.இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும் நண்பர்களே.
அஷ்டமி திதி
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம்.யுத்தம் செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் போராட்ட குணம் இருக்கும்.போராட்டமான வாழ்க்கையும் அமையும் அதில் வெற்றியும் பெறுவார்கள்.காதல் மற்றும் காம உணர்வுகள் அதிகம் இருக்கும்.மண வாழ்வில் நிச்சயம் பிரச்சனை இருக்கும்.சொத்து பிரச்சனைகள் உண்டாகும்.அதிகமாக விபத்துகளைச் சந்திப்பார்கள்.ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை நண்பர்களே.
நவமி திதி
சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம்.போர் செய்யலாம்.பகைவர்களை சிறை பிடிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு தந்தை மகன் கருத்து வேறுபாடு இருக்கும்.பொருளாதார பிரச்சனை இருக்கும்.அழகான தேகம் உடையவர்களாக இருப்பார்கள்.நேர்மையை கடைப்பிடிப்பார்கள்.அதுவே இவர்களுக்கு பிரச்சனையாகவும் இருக்கும்.குளிர் உணவுகளை அதிகம் விரும்புவார்.வழிபாடுகளில் ஆர்வம் இருக்கும்.இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை நண்பர்களே.
தசமி திதி
எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு தொழிலில் விரயங்கள் ஏற்படும்.வாக்குப்பலிதம் உடையவர்.கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைப்பவர்.தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.இனிப்பு வகைகளை விரும்பி உண்பார்கள்.போட்டிகளில் வெற்றி பெறுவார்கள்.இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை நண்பர்களே.
ஏகாதசி திதி
விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.ஆடை ஆபரணம் செய்யலாம்.வாஸ்து சாந்தி செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு அரசியலில் ஆர்வம் இருக்கும்.தந்தை வழி ஆதாயம் இருக்கும்.திருமண வாழ்வில் ரகசியம் இருக்கும்.இருதார தோஷம் இருக்கும்.உதவி செய்வதில் ஆர்வம் இருக்கும்.ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.இதற்கு, ருத்ரன் அதிதேவதை நண்பர்களே.
துவாதசி திதி
தனம் தானியங்கள் சம்பாதிக்கலாம்.சுபச் செலவுகள் தர்ம காரியங்கள் செய்யலாம்.நிலையுள்ள மற்றும் நிலை இல்லாத காரியங்கள் திருவோணம் நட்சத்திரம் வரும் நாள் தவிர்த்து செய்யலாம்.மதச்சடங்குகளில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஏமாற்றம் உண்டு.கல்வியில் ஆர்வம் இருக்கும்.சுறுசுறுப்பாக இருப்பார்.தன்னை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்.இறுதிக்கால வாழ்க்கை செல்வச் செழிப்பாக இருக்கும்.சுய தொழிலில் ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள்.கவனம் தேவை. அதிதேவதை விஷ்ணு நண்பர்களே.
திரயோதசி திதி
சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் வாக்கால் தொழில் செய்வார்கள்.(ஆசிரியர்கள்,பேச்சாளர்கள்).பொருளீட்டுவதில் குறியாக இருப்பார்கள்.வாகன தொழில் சிறப்பாக இருக்கும்.உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.தந்தை மீது பாசம் உள்ளவராக இருப்பார்.குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகம் இருக்கும்.திரயோதசி திதிக்கு அதிதேவதை மன்மதன்.சிவபக்தராக இருப்பார்.வெகு காலங்கள் நிலைத்திருக்க வேண்டிய மங்கள காரியங்கள் செய்யலாம் நண்பர்களே.
சதுர்த்தசி திதி
பல் சம்பந்தப்பட்ட வைத்தியம் செய்யலாம்.மாமிசம் சாப்பிடலாம்.யாத்திரை செல்லலாம்.ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த திதி.வளர்பிறையில் மட்டும் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் காதல் விஷயங்களில் ஆர்வம் உடையவராக இருப்பார்.மதம் இனம் மாறிய காதல் உண்டாகும்.விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும்.அதிகமாக உழைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.தந்தையால் பிரச்சனை ஏற்படும்.பணம் சம்பாதிப்பது நோக்கமாக இருக்கும்.மண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.காளி இந்த திதிக்கு அதிதேவதை நண்பர்களே.
பௌர்ணமி திதி
ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம்.போர் செய்வதற்கு வேண்டிய காரியங்கள் செய்யலாம்.தேவதை பிரதிஷ்டை செய்யலாம்.தோஷ பரிகாரங்கள் செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரம் நன்கு அமையும்.அழகானவராக இருப்பார். பேச்சாற்றல் உடையவராக இருப்பார்.சுய ஜாதகத்தில் சூரியன் சந்திரன் பரிவர்த்தனையில் இருந்தால் சிறப்பு.கலைத்துறைகளில் ஆர்வம் இருக்கும்.மகான்கள் மற்றும் சித்தர்கள் வழிபாட்டில் ஆர்வம் இருக்கும்.யோகக் கலையில் ஆர்வம் இருக்கும்.கார உணவுகளை விரும்பி உண்பார். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை நண்பர்களே.
அமாவாசை திதி
பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு 40 வயதிற்கு மேல் யோகம் உண்டாகும்.சுய உழைப்பால் முன்னேறுவார்.தனிமையை விரும்புவார்.சமையல் கலையில் ஆர்வம் இருக்கும்.இருதார தோஷம் இருக்கும்.வாக்குப்பலிதம் உள்ளவர். ஜோதிடம் நன்கு சித்திக்கும்.இரவில் கண்விழித்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.சிவன், சக்தி அதிதேவதை நண்பர்களே...
ஒரு ஜாதகர் எந்த திதியில் பிறந்தாலும் திதியின் ஆரம்பத்திலும் முடிவிலும் பிறக்காமல் இருப்பது சிறப்பு.ஒரு ஜாதகர் எந்த திதியில் பிறக்கிறாரோ அந்தத் திதியின் இருப்பு நாழிகை அதிகமாக இருப்பது மிகச் சிறப்பு.அதிகமாக இருப்பது நல்ல பொருளாதாரத்தை கொடுக்கும்.திதியின் மொத்த நாழிகையை நான்காக பிரித்துக் கொள்ள வேண்டும்.அதில் முதல் பகுதியும்,கடைசிப்பகுதியும் தவிர்த்து நடுப்பகுதிக்குள் இருப்பு நாழிகை அமைவது சிறப்பு நண்பர்களே.திதியால் ஏற்படும் தோஷங்களுக்கும்,பாதிப்புகளுக்கும் திதி நித்திய தேவதைகளை வணங்கி வருவதும்,திதி நித்திய தேவதைகளுக்கு உண்டான காயத்ரி மந்திரங்களை உச்சாடனம் செய்வதும் மிகச்சிறப்பான நிவர்த்தியாக இருக்கும் நண்பர்களே...

நன்றி ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்





கிமு கிபி எப்போது வந்தது? எப்போது போனது? அதற்கு முன்பு இருந்த ரோமு ரோபி என்றால் என்ன? காலண்டரின் கதையைத் தெரிந்து கொள்வோம்! 

-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

----------------------------------------------------------------

1) மத பீடங்களின் ஆதிக்கத்தில் இருந்த காலண்டர் (காலக் கணக்கு) தற்போது முற்றிலுமாக அறிவியலின் பிடிக்குள் வந்து விட்டது.

2) உலக அளவில் இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர் உண்மையில் ஜூலியஸ் சீசர் திருத்தி வடிவமைத்த காலண்டரே. அ) 12 மாதங்கள் ஆ) 365 நாட்கள் இ) 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் ஆண்டு, அதாவது பிப்ரவரியில் 29 நாட்கள் ஆகிய அனைத்து அம்சங்களுமே கிமு 46ல் சீசரால் அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல், அதாவது,கிமு 45 முதல் செயல்பாட்டுக்கு வந்து விட்டன.

3) ஜூலியன் காலண்டர் செயல்பாட்டுக்கு வந்தபோது, இயேசு கிறிஸ்து பிறந்திருக்கவே இல்லை என்பது கருதத் தக்கது.

4) அப்படியானால், ஜூலியன் காலண்டரில் ஆண்டுகளைக் கணக்கிட எந்தக் குறிப்பைப்

பயன்படுத்தினர் (what was the REFERENCE point then?)

5) அப்போது பயன்படுத்திய reference point ரோம் நகரம் உருவான தேதி ஆகும். அதாவது ரோ.மு, ரோ.பி என்ற கணக்கிடும் முறை இருந்தது. எனினும் இம்முறை பரவலாக மக்களால் பின்பற்றப் படவில்லை.

ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே இதைப் பின்பற்றினர். ரோமு = ரோமாபுரி நகரம் நிறுவுவதற்கு முன்னால், ரோபி = ரோமாபுரி நகரம் நிறுவிய பின்னால்.

6) ரோமு ரோபி என்பன பின்னாளில் கிமு கிபி என்று மாறின. முதலில் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல், இயேசுவைச் சிலுவையில் அறைந்த ரோமாபுரி பின்னர் கான்ஸ்டன்டைன் காலத்தில், கிபி 4ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துவத்தை ஏற்கத் தொடங்கியது.

7) கிபி 525ல் டயோனிசியஸ் எக்சிகஸ் (Dionysius Exiguus) என்னும் ரோமானியத் துறவி (இவர் ஒரு கணித நிபுணரும்கூட) முதன் முதலில் கிமு, கிபி என்ற கணக்கிடும்முறையை அறிமுகம் செய்தார். என்றாலும் கிபி 800ல்தான் இப்பழக்கம் பரவலானது. 

8.. கிபி 1582ல் போப்பாண்டவர் பதின்மூன்றாம் கிரெகோரி ஜூலியன் காலண்டரில் லீப் ஆண்டு குறித்த ஒரு திருத்தத்தைச் செய்தார். ஒவ்வொரு 400 ஆண்டுக்  காலத்திலும்  மூன்று லீப் ஆண்டுகளின் பெப்ரவரியின் லீப் நாட்களைக் குறைத்தார்.

9) இந்த ஒரே ஒரு திருத்தத்தை மட்டுமே அவர் செய்தார். அவருக்கு முன்பே, ஜூலியஸ் சீசரால் பெருமளவு திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றைய காலண்டரின் வடிவம் அன்றே கொண்டுவரப் பட்டு விட்டது. என்றாலும் கடைசியாகத் திருத்தம் செய்தவர் என்ற  அடிப்படையில் இக்காலண்டர் கிரெகோரி காலண்டர் என்று அழைக்கப் பட்டு வந்தது.

10) கிரெகொரிக்குப் பின்னரும் இக்காலண்டரில் தொடர்ந்து தேவையான பல திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 1980களில் கிறிஸ்துவ சகாப்தம் என்ற பெயர் மாற்றப்பட்டு பொது சகாப்தம் என்ற பெயர் சூட்டப்பட்டது.

11) தற்போது காலண்டரில் திருத்தம் செய்யும் அதிகாரம் அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே உள்ளது.1972 முதல்  மேற்கொள்ளப்பட்டு வரும் விநாடித் திருத்தங்கள் பற்றி (adding leap seconds) அறிந்து கொள்ள வேண்டும்.

.12) ஏசு கிறிஸ்துவின் பெயரில் அமைந்த (கிமு,கிபி)காலண்டருக்கு இஸ்லாமிய சமூகம் பெரிதும் ஆட்சேபம் தெரிவித்து ஏற்க மறுத்தது. தற்போது கிமு, கிபி என்ற சொற்கள் நீக்கப்பட்டதானது இஸ்லாமிய சமூகத்துக்கு நிறைவைத் தந்துள்ளது. 

13) ஆக, இன்றைய உலகின் காலண்டர் உலகப் பொதுமையை உறுதி செய்கிறது. மதச்சார்பற்ற துல்லியமான நவீனமான அறிவியல் காலண்டரை மானுடம் அடைந்து விட்டது. இது மானுடத்தின் வெற்றி. இது அறிவியலின் வெற்றி.

புத்தாண்டும் புதிய காலக் கணக்கும்!
பிற்போக்குச் சிந்தனைகளை முறியடிப்போம்!
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
1970களில், 1980களில் படிப்பு வேலைவாய்ப்புக்கான
விண்ணப்பப் படிவங்களில், "Date of birth: According to
Christian era" என்று காலம் இருக்கும். அதை நிரப்ப
வேண்டும்.
இன்று கிறிஸ்து சகாப்தம் (Christian era) என்ற பதம்
முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. போப்பாண்டவர்
13ஆம் கிரெகொரியால் திருத்தம் செய்யப்பட்டு
அவர் பெயராலேயே கிரெகோரி காலண்டர்
(Gregory calendar) என்று வழக்கப்பட்டு வந்த
காலண்டர் இன்று நடைமுறையில் இல்லை.
இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள
வேண்டும்.
ஆக, ஏசு கிறிஸ்துவின் பெயரால் அமைந்த
காலக் கணித முறை (calendar) முடிவுக்கு வந்து
விட்டது. இன்று அது காலாவதி ஆகிவிட்டது.
அரேபியர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் என்று
பல தரப்பினரும் இயேசுவின் பெயரால் அமைந்த
காலக் கணித முறைக்கு (calendar) கடுமையான
ஆட்சேபம் தெரிவித்ததை ஒட்டி, மதத்தின் பெயரால்
அமைந்த அக்கணித முறை உலக அறிவியலாளர்களால்
முற்றிலுமாகக் கைவிடப்பட்டு விட்டது.
இன்று நடைமுறையிலுள்ள புதிய காலக்கணக்கு முறை!
-------------------------------------------------------------------------
கிறிஸ்து சகாப்தம் (Christian era) போய்விட்டது!
பொது சகாப்தம் (Common era) வந்து விட்டது.
கிமு, கிபி என்ற பதங்கள் செத்தொழிந்து விட்டன.
அவற்றுக்குப் பதிலாக,
பொசமு, பொச ஆகிய பதங்கள் வழக்கிற்கு வந்து விட்டன.
பொசமு = பொது சகாப்தத்துக்கு முன்
பொச = பொது சகாப்தம்
ஆகிய பதங்கள் வழக்கில் வந்து விட்டன. உலகெங்கும்
பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் புதிய
மாற்றங்களை உள்ளடக்கிய புதிய காலக்கணித முறை
இடம் பெற்று விட்டது. உலகெங்கும் உள்ள அரசு
ஆவணங்களில், புதிய சகாப்த முறையிலான
காலக்கணித முறையே கடைப்பிடிக்கப் பட்டு
வருகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆங்கிலத்தில் மாற்றங்கள் வருமாறு:-
-------------------------------------
BCE = Before Common Era
(BC = Before Christ என்பது கைவிடப் படுகிறது).
CE = Common Era.
(AD = Anna Domine என்பது கைவிடப் படுகிறது)
எனவே வாசக நண்பர்களே,
தற்போதைய காலண்டர் (ஜனவரி 1ஐ ஆண்டின்
முதல் நாளாகக் கொண்டு டிசம்பர் 31 வரை உள்ள)
காலண்டர் மதச்சார்பற்ற காலண்டர் ஆகும்.
இதைப் புத்தாக்கம் செய்ததும், பராமரித்ததும் அறிவியலாளர்கள். எந்த ஒரு மதத்தின் தலைவருக்கும்
இந்தப் புத்தாண்ட்டில், இந்தக் காலண்டரில் எந்தவொரு
பங்கும் கிடையாது.காலண்டரில் திருத்தம் செய்யும்
உரிமை அறிவியலாளர்களுக்கு மட்டுமே உண்டு.

இந்தக் காலண்டர் அறிவியல் காலண்டர் ஆகும்.
இந்தக் காலண்டர் மதச்சாற்பற்ற காலண்டர் ஆகும்.
இது ஆங்கில காலண்டரோ ஐரோப்பிய காலண்டரோ
அல்ல. இது உலகம் முழுமைக்கும் பொதுவான
காலண்டர் ஆகும். இதைப் போற்றுவோம்.
---------------------------------------------------------
பின்குறிப்பு:
அறிவியல் ஒளி இதழில் முன்பு நான் எழுதிய
காலண்டரின் கதை என்ற நீண்ட கட்டுரையைப்
படிக்கவும்.
***********************************************


கிரிகோரியன் காலண்டர் எனும் நாள் கணக்கு முறை.
கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும்.மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.
இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. பிப்ரவரி 24 1582 ல் அப்போதைய திருத்தந்தையான பதின்மூன்றாம் கிரிகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வந்தது.
இந்த நாட்காட்டியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.
கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நாட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரிகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இரவு பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.
அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன.
ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.
சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும். ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்நூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு லீப்(நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும். லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. ஜூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.
பொதுவாகப் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தினை எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தினை ஒருநாள் என்று வைத்துக் கணக்கிட இருக்கும் சிரமத்தினை எண்ணி, ஒரு ஆண்டினை 365 நாட்கள் என்ற முழு எண்ணாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளைத் தவர்க்க இயலாது என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாகப் பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்துக் கிரிகோரியன் நாட்காட்டில் கணக்கிடப்படுகிறது.
இவ்வாறு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) நாளை இணைக்கையில் 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி காலம் அதிகமாக இணைக்கப்படுகிறது. எனவேதான் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் (நெட்டாண்டு) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பல சீர்த்திருத்தங்களை கொண்ட கிரிகோரியன் நாட்காட்டியானது,மேலும் தீர்வில்லாத சிக்கல்களை கொண்டிருப்பதால் இந்த நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது.
கிறிஸ்தவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்த நாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறுவேறு நாட்களில் வருகிறது. இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில்கொள்வதே காரணமாகிறது.
ஜூலியஸ் சீசரினால் அறிமுகம் செய்யப்பட்ட நாட்காட்டியானது அவருடையப் பெயரிலேயே ஜூலியன் நாட்காட்டி என்று அறியப்பெறுகிறது. இது கிமு 46ல் அறிமுகம் செய்யப்பெற்றது. இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கேற்ப சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.
கி.மு-கி.பி என வரையறை செய்த முறைக்கு அனோ டொமினி என்று பெயர்.
இந்த கி.மு-கி.பி வரையறையை உருவாக்கியவர் இந்தப் படத்தில் உள்ளவர் தான்.ரோம் நகரைச் சேர்ந்த டயோசினியஸ் எக்ஸிகஸ் இவரது பெயர்.
கிபி 525 ல் இந்த முறையை உருவாக்கினார்.
சனவரி mēnsis Iānuārius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். தொடக்கத்திற்குரிய ஜனுஸ் என்ற ரோமானியக் கடவுளின் மாதம்.
பிப்ரவரி (பொதுவாக 28 நாட்கள் நெட்டாண்டில் (leap year) 29 நாட்கள்), mēnsis Februāriusஎன்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். பெப்ருவா மாதம்.
ரோமானியத் தூய்மைத் திருவிழா.
மார்ச் mēnsis Mārtius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "செவ்வாய் கோள் மாதம். ரோமானிய போர்க்கடவுளைக் குறிக்கும் மாதம்.
ஏப்ரல் mēnsis Aprīlisஎன்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். உறுதியில்லா பொருள் , ஏப்ரோடைட் என்ற ரோமானியக் கடவுள் பெயரை குறிக்கும் மாதம்.
மே mēnsis Māius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "விவசாயத்துக்குரிய பெண் கடவுளான மயாவின் மாதம்.
சூன் mēnsis Iūnius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "ஜூனோ மாதம்.திருமணம், குழந்தை பிறத்தல், மற்றும் ஆட்சி செய்தலுக்கான ரோமானிய பெண் கடவுள்.
சூலை mēnsis Iūlius என்ற லத்தீன் மொழியிலிருந்து, "ஜூலியஸ் சீசரின் மாதம்", ஜூலியஸ் சீசர் பிறந்த மாதம்.
ஆகத்து mēnsis Augustus என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "அகஸ்தஸ் மாதம்.
செப்டம்பர் mēnsis september என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் ஏழாவது மாதம்
அக்டோபர் mēnsis octōber என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் எட்டாவது மாதம்.
நவம்பர் mēnsis november என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம்.
திசம்பர் mēnsis december என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதம்.
உலகம் முழுமையும் ஒரே ஆண்டை ஏற்றுக் கொண்டாயிற்று. இப்போது அதைக் கொண்டாடாதே என்று ஒரு கூட்டம் இங்கு கிளம்பியுள்ளது. எதைக் கொண்டாடுவது என்பது அவரவர் உரிமை. கிரிகோரியன் என்பது ஐரோப்பியத் திமிர் என்றால் இங்கு எழும் குரலும் அதற்கு இணையான வேறொரு திமிர். ஒரு நாளைக் கடத்துவது என்பதை தாண்டி இதில் ஆரவாரம் செய்ய ஏதுமில்லை.
தமிழருக்கு சித்திரை மாதமே புத்தாண்டு.


யுகாதி,கொல்லம்,ஹிஜிரி என்று அவரவருக்கும் ஆண்டுகள் உண்டு.

Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...