

புகலூர் கல்வெட்டு
கரூர் அருகே புகலூர் எனப்படும் பயன்மையின் ஊரின் அருகில் உள்ள ஆறு நாட்டு மலை என்ற மலையில் கிடைத்த சமண முனிவர்களுக்கு பாறை குகை அமைத்துக் கொடுத்த பொ.ஆ.2ம் நூற்றாண்டு கல்வெட்டு
புகலூர் கல்வெட்டில் உள்ள பெயர்கள் மூன்று சங்க அரசின் சேர அரசர்கள் பெயர் என்பது என இப்பொழுது கருத்து ஒற்றுமை வந்துள்ளது
கோவை செம்மொழி மாநாட்டில் 26.6.2010 அன்று திரு.கிருஷ்ணமூர்த்தி படித்த கட்டுரையில் சேரர் காசுகள் ரோமன் அகஸ்டஸ் சீசர்(ஆட்சி பொமு27-பொஆ14) காசுகளை பின்பற்றி உருவானவை, ஒரு காசு ரோமன் அகஸ்டஸ் சீசர் காசின் மேல் மாக்கோதை அச்சு வைக்கப்பட்டதையும் கூறி உள்ளார். அகஸ்டஸ் சீசர் படம் தாங்கிய காசுகள் 4ம் நூற்றாண்டு இறுதி வரை வெளியுட்டுள்ளனர்.
இந்த மூன்று காசுகளுமே ரோமன் அகஸ்டஸ் சீசர் காசை பின்பற்றி; ஒரு பக்கம் ஆட்சியின் சின்னம் அதாவது வில்லும் மறு பக்கம் அரசன் தலை அமைந்துள்ளது எனப் பழங்காசுகள் ஆய்வு பேரறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். எனவே இவை பொ.ஆ.2-4ம் நூற்றாண்டு என்பது மிகச்சரியாக பொருந்தும்
சங்க காலத்தில் வாழ்ந்த சேர அரசர்கள்
இக்காசுகளில் உள்ள சேர சங்க காலத்தில் வாழ்ந்த சேர அரசர்கள் பட்டியலை நாம் இரு புத்தகங்களில் காண்கிறோம்
No comments:
Post a Comment