சோழ மன்னன் இராஜ இராஜனின் தங்கை குந்தவை நாச்சியார் இஸ்லாத்துக்கு மாறினாரா? ஒட்டகத்தை கடித்து, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்து கடைசியில் வரலாற்றையே கடிக்க தொடங்கிவிட்டார்கள்!
-----------------------------------------------------------------------------------
குல்லாக்கள் கொடுக்கும் ஆதாரம்:
-----------------------------------------------------
புருடா 1:
-------------
குந்தவை நாச்சியார், இஸ்லாம் மதத்துக்கு மாறிய இடம்," சமயபுரம்" எனத் தெரிகிறது, ஸ்ரீ ரங்கத்து கோயில்ஒழுகு நூலிலும் அதுபற்றிய குறிப்புகள் காணப் படுகிறது! சமயபுரம் "கோயில் தல வரலாறும்" அதனை உறுதிபடுத்துவதாகவே உள்ளது!
நிஜம் 1:
-----------
இது ஒரு சோழ மன்னர் (இராஜ இராஜன்) தன் தங்கைக்கு (குந்தவை நாச்சியார்) சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது.
புருடா 2:
-------------
சமய பு(ர)றம் என்ற பெயர், காரணப் பெயராக இருப்பதையும் காணலாம்! குந்தவை இதுநாள் வரை தான் சார்ந்து இருந்த.. மதத்தை புறம் தள்ளி, புதிய மதத்தை தழுவிக் கொண்டதால் சமயபுற(ர)ம் என்று பின்னாளில் வழங்கப்பட்டு வருகிறது எனத் தோன்றுகிறது!
நிஜம் 2:
-----------
சமயபுரத்தின் வரலாற்றுப் பெயர்கள், கண்ணனூர்
கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் ஆகும். எமதர்மனின் சபையில் நோய்களின் அதிபதியாக இருந்த மாயாசூரன் என்பவன், பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான். இதனைக்கண்ட ஈசன் பார்வதி தேவியைப் பார்க்க, பார்வதி தேவி தன் அம்சமாக மாரியம்மனை தோற்றுவித்து, மாயாசூரனை வதம் செய்ய அனுப்பிவைத்தார். மாரியம்மன் மாயாசூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றினார். உலகில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவிலுக்கும் இதுதான் தலைமை பீடம். அதனால் இவ்வூர் சமய (தலைமை) + புரம்(ஊர்) என்று பெயர் பெற்றது.
புருடா 3:
-------------
குந்தவை நாச்சியாருக்கு கி.பி.1006 -ஆம் முதல் குந்தவையின் பிறந்த நாளான, அவிட்ட நட்சத்திரத்தில் அவனது தம்பி,ராஜராஜன் விழா எடுத்து கொண்டாட உத்தரவிட்டு இருந்ததை கல்வெட்டு தெரிவிப்பதால், குந்தவை கி.பி.1006 -ஆம் ஆண்டிலேயே இந்துமதத்தை விட்டு நீங்கி,இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது அறியவருகிறது!
நிஜம் 3:
-----------
மாமன்னன் ராஜ ராஜ சோழன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக திருவிசலூரிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு தனது வாழ்க்கையில் ஈட்டிய வெற்றிகளுக்காகவும், ராஜேந்திர சோழனை தனது மகனாக, வாரிசாகப் பெற்றமைக்கும் நன்றிக் கடன் செலுத்தினார். இவர்கள் வாதத்தின் படி பார்த்தாலும் விழா எடுத்தலுக்கும் மதம் மாறியதுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? திதி கொடுப்பதேயானாலும் திதி என்பது விழாவா?
புருடா 4:
-------------
குந்தவை தஞ்சை கோயில் பணிகள் ஆரம்பித்தபிறகு, கி.பி.1003 யில் தொடக்கி,அவர் மதம் மாறுவதற்கு முன்பு,அதாவது கி.பி.1006 -குள் தஞ்சை கோயிலுக்கு கோடை அளித்து உள்ளார் என அறியலாம்! தனது சகோதரியின் மீது பெருமதிப்பும், அன்பும் கொண்ட ராஜராஜன் பெரிய கோவிலுக்கு தான் கொடுத்த அறகொடையுடன், தனது சகோதரி குந்தவை கொடுத்த அறக் கொடையையும் சேர்த்து, "கல்லிலே வெட்டுக" என்று உத்தரவிட்டு, கோயில் கல்வெட்டில் இடம்பெறச் செய்துள்ளான். மேலும் தனது சகோதரி குந்தவையின் பிரதி பிம்பத்தை,திருமேனியாக செய்து, அதனைக் கோவிலில் வைத்து வணங்கி வரவும் செய்துள்ளான்.என்பதையே குந்தவை, "தம்மையாக எழுந்தருளுவித்த திருமேனி" என்று கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது எனபது விளங்குகிறது.!
நிஜம் 4:
-----------
என்னக் கொடுமை ஐயா இது! கி.பி 1006 முன் குந்தவை நாச்சியார் மதம் மாறியதாக சொல்றீங்க. அதர்கான தண்டனையா இராஜ இராஜன் சடங்கு செய்து தங்கையை விலக்கி வைத்தார்னு சொல்றீங்க. பின்பு த்ங்கையின் கொடைக்காக தஞ்சை பெரியக் கோவில் கல்வெட்டில் தங்கை பெயரை பதிக்க உத்தரவிட்டதாகவும் சொல்றீங்க.... ஏன் இத்தனை முரண்பாடு?
புருடா 5:
-------------
குந்தவை இஸ்லாம் மார்க்கத்தை, தழுவி, இஸ்லாமிய பெண்ணாகவே இறந்து, இஸ்லாமிய முறைப்படியே அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! அவர் அடக்கம் செய்யப்பட்ட தர்காவில், "இந்துமத வழிபாட்டு முறைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள விளக்கில் நெய்யூற்றி, தீபம் ஏற்றி, வழிபடுவது போன்ற " வழக்கம் இன்றும் தொடர்ந்து நடந்துவருகிறது!
நிஜம் 5:
-----------
குந்தவை நாச்சியார் தனது இறுதிகாலத்தை தஞ்சையில்தான் கழித்தார் என்பதற்கும் கோவில் சிற்பங்களும் சிதளம் அடைந்த கோவிலும் வரலாற்றுச் சான்றாக இன்றும் தஞ்சையில் உள்ளது. ஆதாரங்கள் படங்களில் காண்க......
புருடா 6:
-------------
குந்தவை இஸ்லாம் மதம் மாறியது கி.பி.1006 -என்று அவனீஷ்வரம் கோயிலில் நடந்த அவிட்ட திருநாள் கொண்டாட்டம் அறிவிப்பது போல அவர் இறந்த ஆண்டு கி.பி.1011 -அல்லது 1012 இடையில் ஒருநாள் என்பதை ராஜராஜனும் அவனது மனைவி லோகமாதேவியும் (ஹிரணிய கர்ப்ப தானம்" என்னும் சாதிமாற்ற சடங்கினை செய்ததில் இருந்து அறியவருகிறது!
நிஜம் 6:
------------
முதலில் இந்த பதர்களுக்கு ஹிரண்ய கர்பம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. ஹிரண்யம் என்றால் பொன் என்று பொருள், விஷ்னு என்றும் பொருள்படும். ஹிரண்ய கர்ப தானம் எதற்காக செய்வார்கள் எனில் இனி ஒரு பிறப்பு வேண்டாம் என்றும், இனி எந்த சூழ்நிலையில் கர்பத்தின் வாயிலாக ஒரு பிறப்பு வேண்டாம் என்பதற்காக செய்யப்படுவது. இந்த யாகத்தை எவ்வாறு செய்வார்கள் எனில், பொன்னால் செய்த பசுவின் உள்புகுந்து வெளி வருவது - இனி பிறப்பே வேண்டாம் என்பதை வேண்டும் - பிறவா வரம் பெற செய்யும் யாகம்.
மாமன்னன் ராஜ ராஜ சோழன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக திருவிசலூரிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு தனது வாழ்க்கையில் ஈட்டிய வெற்றிகளுக்காகவும், ராஜேந்திர சோழனை தனது மகனாக, வாரிசாகப் பெற்றமைக்கும் நன்றிக் கடன் செலுத்தினாராம்.
அங்கு ஹிரண்ய கர்ப்பம் என்ற சடங்கில் பட்டத்தரசி உலகமாகாதேவி உள்ளே புகுந்து வெளியே வரக்கூடியளவு பெரிய பொன்னாலான பசு ஒன்றைச் செய்து, பூசைகளின் பின்னர், அந்த பொன்னாலான பசுவைப் பிரித்து கோயில் பூசாரிகளுக்கு தானமாக அளித்தார்.
அந்த நிகழ்ச்சியை நினைவு கூருமுகமாக திரிவிசலூரிலுள்ள சிவயோகனாதர் ஆலயத்தின் சுவரில் மாமன்னன் ராஜ ராஜ சோழனதும், அவனது பட்டத்தரசியினதும் உருவச் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன என்கிறார் பிரிட்டனின் வரலாற்று ஆராய்ச்சியாளர் Michael Woods.( The Story of India - Ages of Gold ) சிவயோகநாதர் ஆலயம் திருவிசாலூர் - கல்வெட்டு , அதற்கு மேலே உள்ள சிற்பத்தில் உள்ள இரு உருவங்கள் - உடையார் ராஜ ராஜர் மற்றும் அவர்தம் பட்டமஹிஷி லோகமாதேவி , அவர்கள் இந்த ஆலயத்தில் செய்த பூஜை மற்றும் கொடுத்த கொடை 458 காசு பொன்.”
-----------------------------------------------------------------------------------
இவர்களாகவே ஒரு இடத்தில் தர்கா கட்டி முட்டிப் போட்டால் அது குந்தவை நாச்சியாரின் சமாதி ஆகிவிடுமா? அல்லது விளக்கு ஏற்றி பூஜை செய்தால் அது உண்மையாகிவிடுமா? சபரிமலைக்கு வாபர் மசூதி கட்டுக் கதைன்னா குந்தவை நாச்சியாருக்கு சமயபுரத்தில் தர்கா அவ்வளவுதான். இவர்கள் முன்வைக்கும் எதற்க்கும் வரலாற்று சான்று துளியும் கிடையது.......
இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார் பொ. ஆ 980 ல் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வெகு காலமாக உருட்டப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பேராசிரியர் அகத்தியதாசன் எழுதிய குந்தவை நாச்சியார் எனும் நூலை மேற்கோள் காட்டி இதுபோன்ற வரலாற்றுத்திரிபுகள் வலம் வருகின்றன. நாம் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்காதபோதே மதவாதி என்ற பட்டத்தை சூட்டும் சில தமிழறிஞர்கள் இதற்கெல்லாம் மறுப்பு பதிவு எழுதினால் நேரடியாக மதவாதியாக மாற்றிவிடுவர் என்ற ஐயம் இருந்தாலும் இதற்கு எதாவது ஒரு வகையில் மறுப்பு எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலர் வலியுறித்தியதன் விளைவாக இப்பதிவை தொடர்கிறேன்...!
முதலில் இதுபற்றிய தகவல்கள் கிடைக்கும் நூல் அகத்தியதாசன் அவர்கள் எழுதிய ஒரு ஆய்வுநூலாகும். இந்நூலில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை சுருக்கமாக பார்த்துவிட்டு இதற்கு மறுப்பு எழுதுவோம்.
1. இராஜராஜ சோழன் பொ.ஆ 962 ல் பிறந்தார்.
2. குந்தவை நாச்சியார் பொ.ஆ 953ஆம் ஆண்டு பிறந்தார்.
3. குந்தவை நாச்சியார் பொ.ஆ 1026 ல் இயற்கை எய்தினார்.
4. இந்த தரவுகளுக்கு ஆதாரங்கள் அரேபியாவில் இருந்து வந்ததாம்.
5. குந்தவை நாச்சியார் மதம் மாறியதால் மாரியம்மன். மதம் விட்டு நீங்கியதால் காளியம்மன்.
6. வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்தான் பரவியது. அரச குடும்பத்தினரை கொலை செய்வதன் மூலமும் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதன் மூலமும் வைணவம் பரப்பப்பட்டதால் தனது தன்மானத்தை காக்க குந்தவை நாச்சியார் மதம் மாறினார்.
7. தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார் தனக்கு தானே திருமேனி ஒன்று எடுத்தார்.
இப்படியாக ஏகப்பட்ட தகவல்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி கொட்டி கிடக்கின்றன அந்நூலில். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அரேபியாவில் உள்ளது என்று எளிதாக கடந்துசென்றுள்ளார் ஆசிரியர். சரி இவற்றிற்கு நாம் பதில் சொல்வதானால் சில வரலாற்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்களிடம் வினவியபோது ஒருசில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன...!
இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 962 என்பதே தவறான தகவல் எனவும், இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 947 என்பதே பெருவாரியான தொல்லியல் ஆய்வாளர்களின் முடிவு என்பது அந்நூலின் கூற்றுகளுக்கு பெருத்த அடியாகும். குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி என்பதால் தோராயமாக பொ.ஆ 945 ல்தான் குந்தவை நாச்சியார் பிறந்திருக வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் குந்தவை நாச்சியாரை மதமாற்றம் செய்தவர்கள் பொ.ஆ 953 வரை எடுத்துச்செல்வது விந்தையிலும் விந்தை...!
பொ.ஆ 1004 வரைதான் குந்தவை நாச்சியார் வைதீக முறையை பின்பற்றி வந்தார் எனவும், அதுவும் 9 வயதில் பாபா நந்தர் எனும் இஸ்லாமிய போதனையாளரை சந்தித்ததில் இருந்து வைதீக முறைகளில் நாட்டமில்லாமல்தான் இருந்தார் எனவும் எழுதிய ஆசிரியர் பொ.ஆ 1004 க்கு பின் இஸ்லாம் மதத்தை நேரடியாக தழுவினார் என்று எழுதுகிறார். இங்கே மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுகிறது.
அது என்ன







பொ.ஆ 1004 ல் இஸ்லாம் மதத்தை ஏற்ற குந்தவை நாச்சியார் 14 ஆண்டுகள் கழித்து எப்படி பழயாறை அரண்மனையில் தங்கி அரசு பணிகள் மேற்கொண்டார்?
அதாவது பொ.ஆ 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப்பணிகள்
மேற்கொண்டார் என்றும் கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார் என்பதும் கல்வெட்டு கூறும் செய்தி. அதாவது தனது 73 வயதிலும் ( 1018 - 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார். இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம். ஆக குந்தவை நாச்சியார் தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார் என்பது மதவெறியின் உச்சமே...!
வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் பரவியது என்று கூறும் ஆசிரியர் வைணவ மதமாற்றத்திற்கு அஞ்சியே குந்தவை நாச்சியார் மதமாறியதாக தனது பிராமண வெறுப்பை வைதீக பிராமணர்கள்மீது காட்டியுள்ளார். ஒருவேளை 12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் தான் வைணவம் வளர்ந்தது என்றால் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் வைணவர்களுக்கென தனியாக சித்தாந்தங்களை வகுத்தார்?
"ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே"
- திருமந்திரம்.
12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில்தான் வைணவம் வளர்ந்தது என்றால் ஐந்தாம் நூற்றாண்டில் வைணவம் என்றொரு சமயம் இருந்ததை திருமூலர் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இது கொடுமணல் அகழாய்வில் வெளிப்பட்ட பானையோடுகளில் பழந்தமிழ் எழுத்தான தமிழியில் காணப்படும் பெயர்களில் ஒன்றுதான்,
" கண்ணன் ஆதன் "
இது திருமால் வழிபாட்டின் எச்சமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தொல்காப்பியத்தின் மாயோன் வழிபாட்டை அடிப்படையாகக்கொண்டு அறியலாம். இதன் அடிப்படையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கண்ணன் எனும் திருமால் வழிபாட்டை கொண்டுள்ளோம் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது. அதுபோல சங்க இலக்கியங்களில் பெருமளவில் புகழப்படும் தெய்வம் திருமால்தான் என்பதை அந்நூலின் ஆசிரியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் வைணவம் வளர்ந்தது என்பதுபோன்ற கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார்...!
அடுத்ததாக தஞ்சை பெரிய கோவிலில் தனக்குத்தானே திருமேனி ஒன்றை குந்தவை நாச்சியார் எடுத்ததாக அந்நூலில் பதிவு செய்துள்ள ஆசிரியர், தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத்திருமேனிகள்
எடுத்துள்ளார் என்பதைத்தான் "தம்மை" என்ற சொல்லால் குறிக்கப்பட்ட கல்வெட்டு கிறிப்பிடுகிறதே அன்றி "தம்மை" என்றால் தனக்குத்தானே என்று
பொருள் அல்ல. இதை "தம் அம்மை" அதாவது தனது தாய் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல வரலாற்றுத் திரிபுகள்தான் அந்நூலில் இடம்பெற்றுள்ளதே அன்றி குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை...!
No comments:
Post a Comment